மகளிர் இலவச பஸ்சில் திருடுவது 'ஈசி!' போலீசில் கொள்ளையன் வாக்குமூலம்
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

கோவை:'மகளிருக்கான இலவச பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் நகை திருடுவது மிகவும் எளிது' என, கோவை போலீசாரிடம் பிடிபட்ட நபர், வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில், நின்றிருந்த ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் மதுரையை சேர்ந்த பார்வதி, 67, அவரது மகன்கள் திவாகர்,36, கண்ணையா, 30, திவாகரின் மனைவியர் முத்தம்மா, 23, முத்துமாரி (எ) கீதா, 24, எனத் தெரிந்தது.

இவர்கள், பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என்பதும் தெரிந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 40 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் விசாரணையில் திவாகர் கூறியதாவது:-

குடும்பத்துடன் சென்று தான் திருட்டில் ஈடுபடுவோம். முதலில் நான், தாய், தம்பி மட்டும் திருட்டில் ஈடுபட்டு வந்தோம்.

பக்கத்து வீட்டு முத்தம்மாவும், அவரது அக்காவுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அக்கா,- தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்டேன்.

அவர்களுடன் இணைந்து தமிழகம் முழுதும் சென்று திருட்டில் ஈடுபட்டோம். கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களை குறி வைத்து திருட்டில் ஈடுபடுவோம்.

குறிப்பாக மகளிர் இலவச பஸ்களில் ஏறுவோம். அதில் தான் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் நகை திருடுவது மிகவும் எளிது.

இரு மனைவியரும், தாயும் பெண்களின் நகைகளை அறுத்து என்னிடம் கொடுப்பர். ஒரு மாதம் ஒரு ஊரில் இருந்து நகைகளை திருடி, அதில் கிடைக்கும் பணத்தை தாராளமாக செலவழிப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X