கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியை சேர்ந்தவர் முருகேசன். இவரது 23 வயது மகளை கடந்த 30ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை முருகேசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனர்.