''நேரடி பிரசாரத்தை தவிர்க்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''துாசு ஆகாதுங்கிறதால வீதி வீதியாக, வீடு வீடாக போய் ஓட்டு கேட்கிறதை தவிர்க்கிறாருங்க... பொதுக்கூட்டம், அரங்க நிகழ்வுகள்ல கலந்துக்கிறதோட, முக்கிய பிரமுகர்களிடம் நேரிலும், போன்லயும் ஆதரவு கேட்கிறாருங்க...
''இதனால, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சோர்வடைஞ்சிட்டாங்க... 'வேட்பாளரை களத்துக்கு அழைச்சிட்டு போகாம பிரசாரம் எடுபடாதே'ன்னு பயப்படுறாங்க...
''அதே நேரம், இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை, பிரசாரத்துக்கு அழைச்சிட்டு போய், காங்கிரஸ்காரங்க சமாளிச்சுட்டு இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.