ஒன்றிய செய்திகள் - கரூர்
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

பாலத்தில் தடுப்பு சுவர்
கட்ட வேண்டுகோள்
கரூர்: கரூர் அருகே நெரூர் சாலையில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி
அருகே, காவிரியாற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. ஆனால்,
கடந்த சில மாதங்களுக்கு முன் தடுப்பு சுவர் இடிந்து விட்டது.

புதிதாக தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. இதனால், அந்த வழியாக,
இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்லும், பொதுமக்கள் தவறி
வாய்க்காலில் விழுகின்றனர். இதனால், வாய்க்கால் மேல் பகுதியில்
உள்ள, பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் கட்ட, நீர்வளத்துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துார்வாரப்படாத
சாக்கடை கால்வாய்
கரூர்: கரூர் அருகே, எஸ். வெள்ளாளப்பட்டி, சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் போதிய அளவில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. ஏற்கனவே உள்ள கழிவுநீர் வடிகாலிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை நாள்தோறும் சுத்தம் செய்வதில்லை. சில பகுதிகளில், திறந்த வெளியில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், எஸ்.வெள்ளாளப்பட்டியில் சுகாதார கேடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எஸ். வெள்ளாளப்பட்டியில் கழிவுநீர் கால்வாயை, துார்வாரி சுத்தம் செய்ய கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சின்டெக்ஸ் தொட்டியை
சீரமைக்க வலியுறுத்தல்
கரூர்: கரூர், எல்.சி.ஐ., காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக,
பல ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிமென்ட் மேடையும் சேதமடைந்துள்ளது. மழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கோடைக்காலம் நெருங்குவதால்,
போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டி
வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டூவீலர்கள் மோதல்
முதியவர் படுகாயம்
குளித்தலை: குளித்தலையை அடுத்த, சேப்ளாபட்டியை சேர்ந்தவர் தங்கராசு, 60. இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், டி.வி.எஸ்., எக்ஸெல் வாகனத்தில் மாகாளிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கழுகூர் - மகாளிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே, இனுங்கூரை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் அதிவேகமாக வந்து மோதினார். இதில், தங்கராசு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தங்கராசு மனைவி சின்னபொண்ணு, 59, கொடுத்த புகாரின்படி, பாலமுருகன் மீது தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பேக்கரி மாஸ்டர் தற்கொலை
குளித்தலை: குளித்தலை அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் ரேவந்த், 28. பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு சரிவர செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரை, தாயார் மங்கையர்க்கரசி கண்டித்தார். இதில் மன உளைச்சலில் இருந்த ரேவந்த், நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் முத்தம்பட்டி நால்ரோடு அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரேவந்த்தை, பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மங்கையர்க்கரசி, கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தீண்டாமை ஒழிப்பு
உறுதிமொழி ஏற்பு
கரூர்: கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டியபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி, நினைவு தினத்தை ஒட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, தலைமை ஆசிரியர் மூர்த்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சட்ட விரோதமாக
மதுவிற்ற 4 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சட்டம் - ஒழுங்கு போலீசார், தோகைமலை, மாயனுார், லாலாப்பேட்டை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக, கணபதி, 42; முகேஷ், 23; செந்தில்குமார், 44; ராசு, 53; ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விபத்தில் விவசாயி பலி
கரூர்: கரூர் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், விவசாயி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி, 52; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆண்டாங்கோவில் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், திருப்பதி அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து, திருப்பதியின் சகோதரர் பாண்டியன், 42; கொடுத்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
குளித்தலையில் பிராணிகளுக்கு
வெறிநோய் தடுப்பூசி முகாம்
குளித்தலை: குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில், வளர்ப்பு பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
குளித்தலை கால்நடை பராமரிப்பு துறை, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வளர்ப்பு பிராணிகளுக்கு, இலவச நோய் தடுப்பூசி முகாம் நேற்று காலை 9:00 மணியளவில் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. முகாமுக்கு குளித்தலை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முரளிதரன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சகுந்தலா முகாமை தொடங்கிவைத்தார்.
இதில், 150க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பருத்திக்கு விலை இல்லை
விவசாயிகள் கவலை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதிகளில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி, வரகூர், வயலுார், பஞ்சப்பட்டி, கருப்பூர், மணவாசி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது செடிகளில் பருத்தி வெடித்து வருகிறது. இந்த பருத்திகளை விவசாய தொழிலாளர்கள் செடிகளில் இருந்து பறித்து, கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மணப்பாறை பகுதியில் மட்டும் பருத்தி விற்பனை நடந்து வருகிறது.
இதில், ஒரு கிலோ ரூ.65க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பருத்திக்கு அதிக செலவு செய்தும் குறைந்த வருவாயே கிடைப்பதால் பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

புங்காற்றில் முள் செடிகளை
அகற்ற கோரிக்கை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தை அடுத்த புதுப்பட்டி புங்காறு தடுப்பணை பகுதியில் அதிக அளவில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுப்பட்டி அருகே உள்ள புங்காறு தடுப்பணை பகுதியில், அதிக அளவில் முள் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், கரையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முள் செடிகள் காரணமாக, புங்காற்றில் மழை நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ஆற்றில் முள் செடிகளை அகற்றி, கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணாதுரை நினைவு நாள்
மின் துறை அமைச்சர் அழைப்பு
கரூர்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் நிகழ்ச்சியில், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என, கரூர் மாவட்ட தி.மு.க., செயலாளரும், மின் துறை
அமைச்சருமான செந்தில்பாலாஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 54வது நினைவு நாள், நாளை அனுசரிக்கப்படுகிறது. கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் உள்ள, அண்ணாதுரை சிலைக்கு நாளை (பிப்., 3) காலை, 9:00 மணிக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்படுகிறது.
அதில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகழூர் நகராட்சி வாரச்சந்தை
இன்று முதல் இடமாற்றம்
கரூர்: புகழூர் நகராட்சி வாரச்சந்தை இன்று முதல் (பிப்., 2) வேலாயுதம்பாளையம், மலைவீதி ரவுண்டானா முதல், கந்தம்பாளையம் வரை செயல்படும்.
இதுகுறித்து புகழூர் நகராட்சி நிர்வாகம் ‍வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சியில், வாரச் சந்தை தற்காலிகமாக, காந்தி நகர் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை செயல்பட்டு வந்தது. ஆனால், காந்தி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாரச்சந்தை இன்று முதல், (பிப்., 2) வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டானா முதல், கந்தம்பாளையம் வரை செயல்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேதமடைந்த சாலையால்
கிராம மக்கள் அவதி
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி கிராமத்தில் இருந்து உடையந்தோட்டம் வரை செல்லும் சாலை வழியாக இப்பகுதி விவசாயிகள் விளை பொருட்களை, டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் எடுத்து செல்கின்றனர்.
தற்போது இந்த சாலை பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், தற்போது, அறுவடை செய்த நெல், வைக்கோல் கட்டுகளை எடுத்துச் செல்லும் விவசாயிகள், கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மகிளிப்பட்டி - உடையந்தோட்டம் சாலையை சீரமைக்க, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X