3.70 lakhs money donation in Kadambavaneswarar temple | கடம்பவனேஸ்வரர் கோவிலில் ரூ.3.70 லட்சம் உண்டியல் காணிக்கை | கரூர் செய்திகள் | Dinamalar
கடம்பவனேஸ்வரர் கோவிலில் ரூ.3.70 லட்சம் உண்டியல் காணிக்கை
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 


குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டதில், பக்தர்கள், ரூ.3.70 லட்சம் செலுத்தியிருந்தது தெரியவந்தது.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 6 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் மாலை, கோவில் செயல் அலுவலர் நித்யா தலைமையில் கோவில் ஆய்வாளர்கள், பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. 6 உண்டியல்களில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 320 இருந்தது தெரியவந்தது. இந்த பணம் கோவில் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில், கோவில் பணியாளர்கள், அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X