கரூர்: கரூர் அருகே சேதமடைந்துள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் - ஈரோடு சாலை, வேலுச்சாமிபுரத்தில் கோவில், ஓட்டல்கள், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன், வேலுச்சாமிபுரம் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டு, மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன.
இந்த நிழற்கூடம் முன், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிறுத்தி, பயணிகள், கல்லுாரி மாணவ, மாணவியரை ஏற்றி, இறக்கி செல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்துள்ளது. இங்குள்ள மின் விளக்குகளும், மேல் தளமும் உடைந்துள்ளது. இதனால், நிழற்கூடத்தில், பயணிகள், மாணவ, மாணவியர் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, வேலுச்சாமிபுரம் பஸ் ஸ்டாப்பில், சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.