155 days in jail for violating probation | நன்னடத்தை மீறியவருக்கு 155 நாள் சிறை | சென்னை செய்திகள் | Dinamalar
நன்னடத்தை மீறியவருக்கு 155 நாள் சிறை
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 



அடையாறு, திருவான்மியூர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 28. கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன; சரித்திர பதிவேடு குற்றவாளி.

இவர், 2022 மே 25ல், அடையாறு காவல் துணை கமிஷனர் முன் ஆஜரானார். அப்போது, திருந்தி வாழ்வதாகவும், ஓராண்டுக்கு எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் எனவும், நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.

இந்நிலையில், டிச., 21ல், ஒரு வாலிபரை தாக்கிய சம்பவத்தில், திருவான்மியூர் போலீசார், இவரை கைது செய்தனர்.

இதனால், நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய குற்றத்திற்காக, 155 நாட்கள் சூர்யாவை சிறையில் அடைக்க, அடையாறு காவல் துணை ஆணையர் மகேந்திரன் உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X