ஆட்கள் பற்றாக்குறையால் நெல் அறுவடை தாமதம்
Added : பிப் 02, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையால், நெல் அறுவடை பணி தாமதமாகிறது, என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி, நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது, பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. அறுவடை செய்ய போதிய கூலித் தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.

பெண் கூலித் தொழிலாளர்கள் பலரும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சேர்ந்து, பணிக்கு சென்று விடுவதால், அறுவடை பணி தாமதமாகி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, பொன்னமராவதி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

தை மாதம் முதல் வாரத்தில், சிலர் அறுவடை செய்து விட்டனர். மழையை எதிர்பார்த்து தாமதமாக நடவு செய்தவர்கள் தற்போது தான் அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமப்புறங்களில் பெரும் பாலானோர், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலைக்கு செல்வதால் அறுவடைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை.

வேலைக்கு வரும் ஒரு சிலரும், 400 முதல் 500 வரை சம்பளம் கேட்கின்றனர். கதிர் அடிக்கும் இயந்திரம் பயன்படுத்தினால் ஒரு மணி நேரத்துக்கு 2,500 ரூபாய் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், குடும்பத்தில் உள்ளவர்களே, அறுவடை செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X