Astrologer jailed for 20 years for sexually harassing girl | சிறுமிக்கு பாலியல் தொல்லை ஜோதிடருக்கு 20 ஆண்டு சிறை | விருதுநகர் செய்திகள் | Dinamalar
சிறுமிக்கு பாலியல் தொல்லை ஜோதிடருக்கு 20 ஆண்டு சிறை
Added : பிப் 03, 2023 | |
Advertisement
 

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் பழனிசாமிக்கு 64, இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜபாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி மூலம் ஒரு குடும்பத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் 2020 கொரோனா காலத்தில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். ராஜபாளையம் மகளிர் போலீசார், பழனிசாமியை 'போக்சோ' , குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் ஜோதிடர் பழனிசாமிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும், நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X