Fraud as a job in Russia | ரஷ்யாவில் வேலை என மோசடி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ரஷ்யாவில் வேலை என மோசடி
Added : பிப் 03, 2023 | |
Advertisement
 

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது, 55, மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சிலரிடம், ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் பெற்றார்.

ஆனால், ரஷ்யாவிற்கு அனுப்பாமலும், கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமலும் மோசடி செய்தார். பாதிக்கப்பட்டவர்கள், பரமக்குடி எமனேஸ்வரம் போலீசில் புகார் அளித்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி கருப்பையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X