மதுரை மாரியம்மன் தெப்பக்குள பராமரிப்பை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைத்து கூடுதல் வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் படகு போக்குவரத்து வசதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகமே பராமரிக்கிறது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரியை மதுரை மாநகராட்சியே மேற்கொள்கிறது. டிக்கெட் கவுன்டர், படகில் ஏறும் வசதி, காத்திருக்கும் அறை, கழிப்பறை போன்ற வசதிகள் இங்கில்லை.
தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டதில் இருந்து மைய மண்டபத்திற்கு படகில் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. மைய மண்டபத்தில் வந்திக்கிழவி சிவபெருமானுக்கு பிட்டு கொடுத்த படலத்தை நினைவுபடுத்தும் சிலை உள்ளது. படிகள் வழியாக படகிலிருந்து பத்திரமாக இறங்க வசதி செய்யலாம். இரவு நேரத்தில் மைய மண்டபத்தில் மின்னொளியால் அலங்கரித்தால் இன்னும் பயணிகளை கவரலாம்.
தெப்பக்குளத்தை சுற்றிலும் ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைகளை ஒற்றை வரிசையில், போக்குவரத்துக்கு இடையூறின்றி, பார்ப்பதற்கும் அழகாக தெரியும் வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.
மதுரை நகருக்குள் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு அம்சம் தெப்பக்குளம் தான். எனவே, தெப்பக்குளத்தை சுற்றி கூடுதல் மின்விளக்குகள், மைய மண்டபத்தில் லேசர் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.
வெளியில் இருந்து தெப்பக்குளம் மைய மண்டபத்தை சேர்த்து போட்டோ எடுக்கும் வகையில் 'செல்பி பாயின்ட்' அமைக்கலாம்.
சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் காபிஷாப் அமைத்தால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை பார்க்க வரும் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் இங்கும் வந்து செல்வர். அவர்களிடம் படகு போக்குவரத்தையும் ஒப்படைத்தால் சுற்றுலா வளர்ச்சி நிதியிலிருந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தமுடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.