புதுக்கோட்டை--அறந்தாங்கியில், 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் சரவணன், 48. கடந்த ஆண்டில், அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார்படி, அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அபராத தொகை இரண்டு லட்சம் ரூபாயுடன், அரசு தரப்பில் 2.5 லட்சம் ரூபாய் சேர்த்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.