நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் தனியாரிடம் விலை கிடைக்காமல் ஏமாற்றம்
Added : பிப் 03, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கரில் நன்செய், புன்செய் விவசாயத்தில் நெல், பருத்தி, மிளகாய், வாழை, மஞ்சள் விவசாயம் நடக்கிறது. பிரதானமாக ஒரு போக நெல் சாகுபடி வட கிழக்கு பருவமழையை நம்பி நடக்கிறது.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்த நிலையில் 3.50 லட்சம் ஏக்கரில்புன்செய் நிலங்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் தென் மேற்கு பருவ மழையால் வைகை, முல்லை பெரியாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வைகை அணைக்கு நீர்வரத்து இருந்ததுடன் கிருதுமால் நதியிலும், பரளை ஆறு வழியாகவும் தண்ணீர் சென்றது. இதையடுத்து பரமக்குடி, போகலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நெல் விவசாயம் நடந்தது.

தை முதல் நாள் துவங்கி அறுவடை செய்யப்படும் நிலையில், நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் நிலையங்களை முழுமையாக திறக்காத நிலை உள்ளது. இதனால் தனியாரிடம்வெளி சந்தையில் கிலோ ரூ.17 வீதம் விற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அறுவடை இயந்திர வாடகை, ஏற்று, இறக்கு கூலி என செலவழித்த பணம் அதிகம் என்கின்றனர், விவசாயிகள்.

ராமநாதபுரம் பூர்வீக வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறுகையில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் குறைந்த பட்ச ஆதார விலையாக்கசட்டம் கொண்டு வருவோம், என்றனர்.

ஆனால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில், குவிண்டாலுக்கு 2160 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளனர். விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்ட குவிண்டாலுக்கு ரூ. 3000 வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும் கடந்த மாதத்தில் 100 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும், என கூறிய நிலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
03-பிப்-202316:26:38 IST Report Abuse
N SASIKUMAR YADHAV கருநாநிதியின் பேனா சிலைக்கு பணத்தை செலவுக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் . கொள்முதல் நிலையம் அமைக்க பணமில்லையாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X