Vellore Corporation Commissioner assumes charge | வேலூர் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு | வேலூர் செய்திகள் | Dinamalar
வேலூர் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
Added : பிப் 03, 2023 | |
Advertisement
 
Vellore Corporation Commissioner assumes charge  வேலூர் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

வேலுார்:வேலுார் மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக ரத்தினசாமி பொறுப்பேற்றார்.வேலுார் மாநகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த அசோக்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை சிப்காட் பொது மேலாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரத்தினசாமி வேலுார் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சி ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு வர வேண்டும். புகார்கள் வராதபடி ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.மக்கள் புகார்கள் தெரிவித்தால் பொறுமையுடன் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.வேலுார் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பதவி ஏற்ற கமிஷனர் ரத்தினசாமிக்கு, வேலுார் மேயர் சுஜாதா வாழ்த்து தெரிவித்தார்

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X