குழாய் வாயிலாக சமையல் 'காஸ்' இணைப்பு... விரைவில்! புது திட்டத்துக்கு சென்னை மாநகராட்சி அனுமதி
Added : பிப் 03, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

சென்னையில் வீடுகளுக்கு 'காஸ்' இணைப்பு வழங்குவதற்கான குழாயை, சாலையில் புதைவடத்தில் கொண்டு செல்ல மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதற்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின், சென்னை மாநகரில் விரைவில் வீடுகளுக்கு, குழாய் வாயிலாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நாடு முழுதும் வீடுகள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு, காஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக, குழாய் வாயிலாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

அதன்படி மாநிலத்தில் நாகப்பட்டினம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கோயம்புத்துார், கடலுார், திருவாரூர், ராமநாதபுரம், சேலம், திருப்பூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில், குழாய் வாயிலாக காஸ் இணைப்பு வழங்க, தமிழக அரசு 2020ல் அனுமதி வழங்கியது.

சென்னை மாநகராட்சியில், 'டோரன்ட் காஸ்' நிறுவனம், குழாய் வாயிலாக வீடுகளுக்கு காஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை ஆகிய துறைகளிடம் சாலைகள் இருப்பதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.

தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின், இதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இணைந்து உருவாக்கி உள்ளன.

இதில், காஸ் குழாய் புதைவடம், மற்ற சேவை நிறுவனங்களின் 'கேபிள்'களுக்கும், மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய்க்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் கல்வெட்டுகள், பாலங்கள் போன்றவை பாதிக்கப்படக் கூடாது. அதேபோல, போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் தார்ச்சாலையில் புதைவடத்தில் காஸ் குழாய் இணைப்பு அமைக்க, 1 கி.மீ., துாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

அதேபோல, கான்கிரீட் சாலைக்கு 1 கி.மீ., துாரத்திற்கு, 21.75 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அதேபோல, நெடுஞ்சாலைத் துறை சாலையின் கட்டணமும் மாறுபடும்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், சாலை வெட்டுப்பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடி கள ஆய்வு செய்து, அதன்பின் அச்சாலையில் காஸ் குழாய் புதைவட பணிக்கு அனுமதி அளிப்பர்.

அதற்கான அனுமதி பெறாமல் பணிகள் மேற்கொண்டால், சம்பந்தப்பட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, சாலையை சரி செய்வதற்கான தொகையில் ஐந்து மடங்கு கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.

சென்னையில் குழாய் வாயிலாக வீடுகளுக்கு காஸ் இணைப்பு வழங்குவதற்கு, சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி, அதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து, தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது.

அவற்றை தமிழக அரசு பரிசீலித்து, விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Godyes - Chennai,இந்தியா
05-பிப்-202301:19:06 IST Report Abuse
Godyes சோஷியல் ஈவில்ஸ் வாழும் இடங்களில் காஸ் இணைப்பு குழாய்களில் பாதுகாப்பு கவனம் தேவை
Rate this:
Cancel
sam - Trichy,இந்தியா
04-பிப்-202310:37:26 IST Report Abuse
sam அடேங்கப்பா ரொம்ப கவனமாகவும் எச்சரிக்கையுடனும் செயல்படுத்த வேண்டிய பணியாச்சே. நடந்தால் மக்களுக்கு நல்லதுதான். தமிழ்நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். செய்வார்களா பார்ப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X