அரசு கட்டடத்தை ஆக்கிரமித்து உலர்களம் கட்டும் பணி அமோகம்
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

ஆர்.கே.பேட்டை:பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி கிராமத்தில் அரசு பாறை புறம்போக்கு நிலம் சர்வே எண்: 124/1ல், 9560 சதுர அடி பரப்பு நிலத்தில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் கால்நடை மருந்தக கட்டடம் கட்டி இயங்கி வருகிறது.

இந்நிலையில் கால்நடை மருந்தகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் தனிநபர் ஒருவர் உலர் களம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது களம் கட்டுவதற்கு ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஊராட்சி நிர்வாகம் அனுமதியின்றி, உலர் களம் கட்டுவதற்கு கடந்த இரண்டு நாட்களாக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து திருத்தணி கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கால்நடை மருந்தக கட்டடத்திற்கு சொந்தமான நிலத்தில் தனிநபர் உலர்களம் கட்டும் தகவல் அறிந்ததும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பணிகள் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டன.

இருப்பினும் தனிநபர் மீண்டும் அந்த இடத்தில் களம் கட்டுவதற்கு முயற்சி செய்வதாக தகவல் அறிந்ததும், எங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் கால்நடை மருந்தகத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமித்து களம் கட்டப்படுவது குறித்து புகார் மனு அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து, உலர்களம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X