போலி ஆவணம் சமர்ப்பித்து வரன்முறை செய்த உத்தரவு ரத்து!
Updated : பிப் 04, 2023 | Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

கோவை:கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்துக்கு போலி ஆவணம் சமர்ப்பித்து பெறப்பட்ட வரன்முறை உத்தரவை, கமிஷனர் பிரதாப் ரத்து செய்தார்.

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடங்களுக்கு (ரிசர்வ் சைட்) போலி ஆவணம் தயாரித்து, விற்பனை செய்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதை தடுக்க, பொது ஒதுக்கீடு இடங்களை கண்டறிந்து, ஆவணப்படுத்தும் வேலைகள், நகரமைப்பு பிரிவினரால்மேற்கொள்ளப்படுகிறது.

இதில், 39வது வார்டில் உள்ள மருத நகர், 7.39 ஏக்கர் பரப்பு கொண்டது. பொது பயன்பாட்டுக்காக, 69 சென்ட் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இவ்விடத்தில், 12 சென்ட் பரப்புக்கு போலி ஆவணம் தயாரித்து, ஒருவர், மனை வரன்முறை பெற்றிருப்பது, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கவனத்துக்கு தெரியவந்தது.

அவர் விசாரணை நடத்தியதில், வீரகேரளம் கிராமம், மருத நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான 238.29 சதுர மீட்டர் பொது ஒதுக்கீடு இடத்துக்கு போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, மனை வரன்முறை செய்திருப்பதை கண்டுபிடித்தார். மனை வரன்முறை செய்த உத்தரவை உடனடியாக ரத்து செய்து, அறிவிப்பு பலகை வைக்கவும், பத்திரப்பதிவு துறைக்கு தகவல் தெரிவித்து, பதிவை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கவும் நகரமைப்பு பிரிவினருக்கு, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளரால் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர். மாநகராட்சியால் மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு, 2.5 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல், மாநகராட்சியால் மீட்கப்படும் இடங்களில் சிறிய அளவில் 'பிளக்ஸ் போர்டு' வைக்கப்படுகிறது; நாளடைவில் சிதிலமடைந்து காணாமல் போய் விடுகிறது. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாத சமயங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்குகிறது. எனவே, சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, பெயிண்டால் எழுதி, அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X