காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன் மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

மதுரை:மதுரை தெற்குவாசலில், பட்டப்பகலில், காதல் மனைவியை குத்திக் கொலை செய்து தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை தெற்குவாசல், சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது இளைய மகள் வர்ஷா, 19. நேற்று மதியம் வீட்டருகே உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது, 'ஹெல்மெட்' அணிந்து, 'டூ - வீலரில்' வந்த நபர், வர்ஷாவின் தலைமுடியை பிடித்து இழுத்து, கத்தியால் வாய்ப்பகுதி மற்றும் காலில் குத்திவிட்டு தப்பினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அருகில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் வர்ஷா இறந்தார்.

முதற்கட்ட விசாரணையில், வர்ஷாவின் கணவர் பழனி, 28, இந்த கொலையை செய்தது தெரிந்தது. அவரது 'மொபைல் போன், சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு உள்ளது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

கொலை குறித்து போலீசார் கூறியதாவது:

பழனி எம்.பி.ஏ., படித்த போது, வர்ஷாவின் அக்காவை ஒருதலையாக காதலித்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக பழனி மீது, 2021ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரை பழிவாங்க நினைத்து, வர்ஷாவை பழனி காதலித்தார். அக்காவை காதலித்தவர் எனத் தெரிந்தும், அவரை வர்ஷா காதலித்தார்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், கடந்த செப்டம்பரில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், மதுரை நகர் மகளிர் போலீசாரிடம் தஞ்சம் அடைந்தனர். பெற்றோரும், போலீசாரும் அறிவுறுத்தியும், அதை பொருட்படுத்தாமல், வர்ஷா பழனியுடன் குடும்பம் நடத்தினார்.

பின், 40 நாட்களில் பழனியின் நடவடிக்கை பிடிக்காததால், தந்தை வீட்டிற்கு திரும்பினார்.

இதனால், மகளிர் போலீசில் பழனி புகார் செய்தார்.

போலீசார் சமரசம் செய்தனர். ஆனாலும், கணவரை பிரிந்து தந்தை வீட்டிலேயே வர்ஷா இருந்தார்.

இந்நிலையில், நேற்று கடைக்கு வந்தபோது வர்ஷா குத்திக்கொலை செய்யப்பட்டார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.



'துாங்கா நகரம்' கொலை நகரமானது!

மதுரை நகரில் ஜன., 31ல் சோலையழகுபுரத்தில் நகைக்கடை உரிமையாளர் மணிகண்டன், 44, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, 6 லட்சம் ரூபாய் கடனை திருப்பித்தராதது உள்ளிட்ட பிரச்னைகளால் கூலிப்படையை ஏவி நடந்தது தெரியவந்தது. ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஏட்டு ஹரிஹரபாபு உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.பிப்., 1 இரவு தென்பரங்குன்றம் பகுதியில் டைல்ஸ் தொழிலாளி சுரேஷ், 39, வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வர்ஷா கொலை செய்யப்பட்டுள்ளார்.போலீசார் கூறுகையில், 'மூன்று கொலைகளுமே தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தவை. கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவர்' என்றனர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X