அடுத்த 5 நாட்களுக்கு லேசான தூறல் மழைக்கு வாய்ப்பு :வேளாண் பல்கலை தகவல்
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

கோவை:கோவையில் எதிர்வரும் 5 நாட்களுக்கு வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுவதாக வேளாண் பல்கலை கால நிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

கோவையில் எதிர்வரும் 5 நாட்களில், அதிகபட்சமாக 30 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்நிலையில், வறண்ட வானிலை தொடர்வதால், மண் ஈரத்தினை பொறுத்து மாலையில் நீர் பாசனம் செய்ய வேண்டும். பயிர் கழிவு மூடாக்கு இடுவதால் மண் ஈரத்தினை பாதுகாக்கலாம்.

கரும்பு நடவை பொறுத்தவரை, இளங்குருத்து புழு வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி வயலை நன்கு ஈரமாக வைத்துக் கொள்வதன் மூலம் இந்த தாக்குதலை குறைக்கலாம். வாழையில் சில இடங்களில் வாடல் நோய் காணப்பட்டால், நோய் அதிகமாக பாதித்திருந்த மரத்தை அகற்றி விட்டு சுண்ணாம்பு இடவும்.மஞ்சள் கிழங்கு முதிர்வடையும் நிலையில் இருப்பதால் இடைவெளியினை அதிகரித்து அளவான தண்ணீர் பாய்ச்சவும்.

மரவள்ளி கிழங்கில் வெள்ளை ஈ தாக்குதல் வர வாய்ப்புள்ளது, எனவே நன்கு கண்காணித்து மஞ்சள் ஒட்டுபொறி வைத்து 5 அல்லது 6 இடங்களில் வைக்கவும். தேவைப்பட்டால் டையோசோபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அல்லது இமிடோகுளோரோபிட் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.6 மில்லி வீதம் கலந்து தெளிக்கவும்.

தென்னை மரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலையால் இலைகருகல் நோய் வர வாய்ப்புள்ளது. கார்பன்டசிம் மருந்தை 100 மில்லி தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து வேர் மூலம் செலத்தவும். கால்நடைகளை பொறுத்தவரை கறவை மாடுகளில் மடிவீக்க நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு சதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலை கொண்டு பால் கறப்பதற்கு முன்னும் பின்னும் மடியை சுத்தம் செய்யவும். இவ்வாறு, விவசாயிகளுக்கு வேளாண் பல்கலை கால நிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X