Worship at Chaturagiri without devotees | பக்தர்களின்றி சதுரகிரியில் வழிபாடு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
பக்தர்களின்றி சதுரகிரியில் வழிபாடு
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷ வழிபாடு பக்தர்களின்றி நடந்தது.

மழை காரணமாக கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை சென்னை உட்பட பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் தாணிப்பாறை மலை அடிவாரம் வந்தனர். வனத்துறை கேட் முன் சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வத்திராயிருப்பு ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு கோயிலுக்கு வந்த உள்ளூர் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

மாலை 4:30 மணிக்குமேல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் பிரதோஷ பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர். பக்தர்கள் இல்லாமல் அடிவாரம் முதல் கோயில் வரை வெறிச்சோடி காணப்பட்டது. வத்திராயிருப்பு, சாப்டூர் போலீஸ் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X