முதல்வர் 'விசிட்'டுக்கு பின் ராணிப்பேட்டை, திருப்பத்துார் கலெக்டர்கள் மாற்றம் எஸ்.பி.,யும் துாக்கியடிக்கப்பட்டதன் பின்னணி
Added : பிப் 04, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

வேலுார்:'கள ஆய்வில் முதல்வர்' புதிய திட்டப்படி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி விட்ட முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பிய, 24 மணி நேரத்துக்குள், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களும், ராணிப்பேட்டை எஸ்.பி.,யும் மாற்றப்பட்டனர்.

'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தில், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தை, வேலுாரில், முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் நடத்தினார்.

இந்த கூட்டம் முடிந்து அவர் சென்னை திரும்பிய, 24 மணி நேரத்துக்கு முன் அடுத்தடுத்து, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்துார் மாவட்ட கலெக்டராகவும், திருப்பத்துார் கலெக்டர் அமர்குஷ்வாஹா, சமூக பாதுகாப்புத்துறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டனர்.

அங்கு இயக்குனராக பணியாற்றிய வளர்மதி, ராணிப்பேட்டை கலெக்டராகவும் நியமித்து அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில், ராணிப்பேட்டை எஸ்.பி., தீபா சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டார்.



பின்னணி என்ன?




திருப்பத்துார் கலெக்டராக அமர் குஷ்வாஹா, 2021 ஜூன், 5ல் நியமிக்கப்பட்டார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஊராட்சி, நகராட்சி தலைவர்கள் மற்றும் தி.மு.க., முக்கிய பொறுப்பில் உள்ளவர்களிடம் சட்டப்படி நடந்து கொண்டார்.

கடந்த மாதம் மாவட்டத்தில், 78 கிராம உதவியாளர் பதவிக்கு நேர்காணல் நடந்தது. இதில் ஆளும் கட்சி சிபாரிசுகளுக்கு செவி சாய்க்காமல் நேர்மையான முறையில் நடந்து கொண்டார்.

இதுகுறித்து, தி.மு.க., மாவட்ட செயலரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.,வுமான தேவராஜ் மூலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான வேலுவிடம், ஆளும் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், முதல்வரின் கள ஆய்வு கூட்டத்துக்கு பின் அவர் மாற்றப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், செப்., 10ல் பதவியேற்றார். அப்போது முதல், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை அனுசரித்து சென்றார்.

புகார் கொடுக்க வரும் பொது மக்களை அழைத்து பேசி, பிரச்னைகளை தீர்த்து வைத்தார். மாவட்ட வளர்ச்சிப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டினர்.

இருந்தும் திருப்பத்துார் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். ராணிப்பேட்டையில் இருந்து இவர் மாற்றப்பட்டது அம்மாவட்ட மக்களுக்கு இழப்பு தான்.



எஸ்.பி.,யும் துாக்கியடிப்பு




இதே போல, ராணிப்பேட்டை எஸ்.பி., தீபா சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.,யாகவும், சென்னை சைபர் பிரிவு துணை கமிஷனர் கிரன் சுருதி, ராணிப்பேட்டை எஸ்.பி.,யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளச்சாராயம், கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. போலி டாக்டர்களும் அதிகரித்துள்ளனர்.

அரக்கோணத்தில் உள்ள ரவுடிகள், சென்னையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், விழாக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார் என்றும், எஸ்.பி., தீபா சத்யன் மீது அடுக்கடுக்காக புகார் எழுந்தது.



அதிர்ச்சி




இது குறித்து எஸ்.பி., தெரிவித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாததால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் திடீர் நடவடிக்கை, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
JeevaKiran - COONOOR,இந்தியா
06-பிப்-202318:06:05 IST Report Abuse
JeevaKiran இப்பவாவது IPS & IAS அதிகாரிகள் ஒன்று திரண்டு அராஜகம் செய்யும் அ.வியாதிகளுக்கு அடிபணியாமல் அவர்கள் மீது உடனுக்குடன் சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கிக்கொடுத்தால்தான் அ.வியாதிகள் திருந்துவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X