கோவில்களில் தை மாத பிரதோஷ வழிபாடு சிவபெருமான், நந்தி பகவானுக்கு ஆராதனை
Added : பிப் 04, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

- நிருபர் குழு -

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தை மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி திப்பம்பட்டி பூங்கா நகர் சிவசக்தி கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. சிவபெருமானுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் மலையாண்டீஸ்வரர் அருள்பாலித்தார். சுவாமிக்கு கனி வகைகள் படைக்கப்பட்டன.

பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. டி.கோட்டாம்பட்டி வரதராஜப்பெருமாள் கோவில், மாகாளியம்மன், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில்களில், பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, தை மாதம் இரண்டாவது பிரதோஷ பூஜை, நேற்று மாலை, 5:30 மணிக்கு நடந்தது. பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.

தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது. ரிஷப வாகனத்தில் சிவபெருமான் தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* உடுமலை, தில்லைநகர் ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நந்திபகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அருகே, அமராவதிநகர் சித்தி விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சதாசிவ லிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். அமராவதி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டனர்.

பிரசன்ன விநாயகர் கோவில், கடத்துார் அர்ச்சுனேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை பஞ்சலிங்க சுவாமி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
04-பிப்-202321:46:42 IST Report Abuse
Ram pollachi பொள்ளாச்சியில் இருக்கும் சித்தாண்டீஸ்வர் கோவிலுக்கு (சிங்காநல்லூர்) ஒரு முறையாவது பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளவும். நடுஇரவில் சித்தர்கள் இங்கு வந்து சிவபூசை செய்வதாகவும் நம்பப்படுகிறது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X