புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க., - காங்., வெளிநடப்பு: மாநில அந்தஸ்து குறித்து காரசார விவாதம்
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
In the Puducherry Assembly, DMK, - Congress, walk out   புதுச்சேரி சட்டசபையில்  தி.மு.க., - காங்., வெளிநடப்பு: மாநில அந்தஸ்து குறித்து காரசார விவாதம்



புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டசபை நேற்று காலை 9:30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம், திருக்குறள் வாசித்து சபை அலுவல்களை துவக்கினார்.

பின், இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். தொடர்ந்து, சபையில் அனைவரும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் சென்றார். தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் பேசுவதற்காக எழுந்தார். அப்போது, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து பேசத் துவங்கினர்.

அவர்களுடன், காங்., எம்.எல்.ஏ.,க்களும் எழுந்து நின்று பேசத் துவங்கினர். இதனால், சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து, மாநில அந்தஸ்து விஷயத்தில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி நாடகமாடுவதாக கூறி, காங்., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் வெளிநடப்பு செய்தனர்.

சபையில் இருந்த தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பேசினர்.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசும்போது, 'முதல்வர், அமைச்சர்கள் மத்திய அரசிடம் பேசி கஷ்டப்பட்டு பணம் வாங்கி வருகிறார்கள். ஆனால், அதிகாரிகள் செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர். மாநில அந்தஸ்து நமக்கு கண்டிப்பாக தேவையாக உள்ளது.

இந்த ஆட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. பள்ளி மாணவர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கப்படவில்லை.

என்.ஆர். காங்., கட்சியின் கூட்டணி கட்சியான பா.ஜ., அரசு தான் மத்தியில் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் ஜனநாயகத்தை செயல்படாமல் செய்து விட்டனர். மாநில அந்தஸ்து பெறுவதில் முதல்வர் உறுதியாக இல்லை. இதை கண்டிக்கிறாம்.

மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'மாநில அந்தஸ்து கிடைத்தால் என்னவெல்லாம் கிடைக்குமோ, அதை எல்லாம் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருகிறோம்' என கவர்னர் கூறுகிறார். இதுதொடர்பாக, மாநில அரசின் கருத்து என்ன?' என கேள்வி எழுப்பினார்.

நாஜிம் எம்.எல்.ஏ., பேசும்போது, 'மாநிலத்தை சக்கரவர்த்தி ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ராணி எலிசபெத் ஆளக் கூடாது. மாநில அந்தஸ்து கேட்டு தான் என்.ஆர்.காங்., கட்சி உதயமானது. உள்ளூர் அதிகாரியைக் கூட மாற்றுவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. மாநில அந்தஸ்து பெறுவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? ' என்றார்.

சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு பேசும்போது, 'கவர்னர் எதை நினைத்தாலும் செய்யலாம் என்ற நிலையே உள்ளது. புதுச்சேரி நகராட்சி ஆணையராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளனர். இது, முதல்வர், அமைச்சர்களுக்கு தெரியுமா? தமிழ் தெரியாத அதிகாரியிடம் மக்கள் பிரச்னையை எப்படி பேசுவது? மாநில அந்தஸ்து அவசியம் நமக்கு தேவை. மின்துறையில் 'ப்ரீபெய்டு மீட்டர்' தொடர்பாக பேச வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, 'மாநில அந்தஸ்து வேண்டும்... மாநில அந்தஸ்து வேண்டும்...' என்று கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மாநில அந்தஸ்து விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X