நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் முகூர்த்த நேரத்தில் திருமணம் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வஜீர்கான் தெருவை சேர்ந்தவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோர்களும் நிச்சயம் செய்தனர்.
நெல்லிக்குப்பம் தனியார் மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாட்டினை மணமகன் வீட்டார் செய்திருந்தனர். நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் நேற்று காலை, முகூர்த்த நேரத்திற்கு சற்று முன், 'மணமகள் தன்னிடம் சரியாக பேசவில்லை' என மணமகன் புகார் கூறியுள்ளார்.
'திருமணம் நடந்தால் சரியாகிவிடும்' என மணமகள் தரப்பினர் சமாதானம் செய்தனர். ஆனால் அதை மணமகன் ஏற்கவில்லை. அதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்ததால் பதட்டம் நிலவியது.
'திருமணத்துக்கு முன்பே சந்தேகப்படும் நபருடன் திருமணம் செய்து நிம்மதியாக வாழமுடியாது' என மணமகள் கூறினார். அதையடுத்து, மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டு, பெண்ணை அழைத்துச் சென்றனர்.
முகூர்த்த நேரத்தில் திருமணம் நின்று போன சம்பவம், நெல்லிக்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.