முகூர்த்த நேரத்தில் நின்ற திருமணம்; நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் முகூர்த்த நேரத்தில் திருமணம் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வஜீர்கான் தெருவை சேர்ந்தவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு தரப்பு பெற்றோர்களும் நிச்சயம் செய்தனர்.

நெல்லிக்குப்பம் தனியார் மண்டபத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாட்டினை மணமகன் வீட்டார் செய்திருந்தனர். நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் நேற்று காலை, முகூர்த்த நேரத்திற்கு சற்று முன், 'மணமகள் தன்னிடம் சரியாக பேசவில்லை' என மணமகன் புகார் கூறியுள்ளார்.

'திருமணம் நடந்தால் சரியாகிவிடும்' என மணமகள் தரப்பினர் சமாதானம் செய்தனர். ஆனால் அதை மணமகன் ஏற்கவில்லை. அதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்ததால் பதட்டம் நிலவியது.

'திருமணத்துக்கு முன்பே சந்தேகப்படும் நபருடன் திருமணம் செய்து நிம்மதியாக வாழமுடியாது' என மணமகள் கூறினார். அதையடுத்து, மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டு, பெண்ணை அழைத்துச் சென்றனர்.

முகூர்த்த நேரத்தில் திருமணம் நின்று போன சம்பவம், நெல்லிக்குப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X