மேலவளவு 6 பேர் கொலை வழக்கு 13 பேர் விடுவிப்பிற்கு எதிராக மனு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் உட்பட 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த 13 பேரை முன்கூட்டியே விடுவித்ததற்கு எதிராக தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை வழக்கறிஞர் ரத்தினம் 2019 ல் தாக்கல் செய்த மனு: மேலுார் அருகே மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த முருகேசன் உட்பட 6 பேர் 1997 ல் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த ராமர், சின்ன ஒடுக்கன், செல்வம் உட்பட 13 பேரை எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி முன்கூட்டியே விடுவிக்க 2019 நவ.,8 ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை. அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு ரத்தினம் மனு செய்தார்.

2019 நவ.,27 ல் நீதிபதிகள் அமர்வு, 'விடுவிக்கப்பட்ட 13 பேரும், மேலவளவிற்குள் நுழையக்கூடாது. வேலுார் மாவட்டத்தில் தங்க வேண்டும்,' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. 2020 பிப்.,18 ல் நீதிபதிகள் அமர்வு, 'மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதுபோல் உள்ளது. ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை திரும்பப் பெறுகிறது,' என உத்தரவிட்டது.

முருகேசனின் மனைவி மணிமேகலா உட்பட சிலர், '13 பேரை முன்கூட்டியே விடுவிக்க பிறப்பித்த அரசாணையில் விதிமீறல் உள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்,' என மனு செய்தனர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர் மோகன் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில் அழகர்சாமி, மார்க்கண்டன் உட்பட 3 பேரை தமிழக அரசு 2008 ல் முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனால் மேலவளவில் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி அரசின் முடிவால் 1636 ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலையாவதற்கு தகுதி பெற்றனர். இதில் 13 பேரும் சிறையில் இருந்தபோது மற்றும் பரோலில் சென்றபோது அவர்களின் நடத்தை கண்காணிக்கப்பட்டது. அப்போது எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை என அரசு தரப்பு கூறுகிறது. அரசு முறையாக பரிசீலித்து விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X