கரூர்: ஆத்துப்பாளையம் அணையில் இருந்து திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று நிறுத்தப் பட்டது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால், 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 14.07 அடியாக இருந்தது. இதனால், நொய்யல் பாசன வாய்க்காலில் கடந்த, 10 நாட்களாக திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது.
மாயனுார் கதவணை
கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 3,592 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 4,236 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 71.49 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு, நேற்று காலை வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர்
வந்துகொண்டிருந்தது.