தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று மாலை பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகத்தை தொடர்ந்து அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி சிவசக்தி சித்தர் பீடம் கோவில், எஸ்.வி.,ரோடு ஆதிசிவன் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உள்பட, மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.