பட்டியலினத்தவர் சென்ற கோவில் 3 நாளுக்கு பின் திறந்து பொது வழிபாடு
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

சேலம்: சேலம், திருமலைகிரியில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு பட்டியலின மக்கள் கோவில் வெளியே நின்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த, 26ல் பட்டியல் பிரிவை சேர்ந்த பிரவீன்குமார், 23, கோவில் உள்ளே சென்று அம்மனை வழிபட்டார்.


இதில் கோபமடைந்த, திருமலைகிரி ஊராட்சி தலைவரான, தி.மு.க., ஒன்றிய செயலர் மாணிக்கம், கடந்த, 27ல் அந்த வாலிபரை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதுகுறித்த வீடியோ பரவிய நிலையில், 30ல் மாணிக்கத்தை, இரும்பாலை போலீசார் கைது செய்தனர்.
அன்று கோவில் நடை பூட்டப்பட்டு அதன் சாவி, ஊர் கவுண்டர் அர்ச்சுணனிடம் இருந்தது. பூசாரியிடம் சாவி கிடைக்காததால் வழக்கமான பூஜை நடக்கவில்லை. இதுதொடர்பாக, 3 நாளாக வருவாய்த்துறையினர், அறநிலையத்துறை அதிகாரிகள், பேச்சு நடத்தினர்.
அப்போது கோவிலில், வரும், 7ல் சக்தி அழைப்பு, 8ல் திருக்கல்யாணம், தீ மிதித்தல், 9ல் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் உள்ளிட்டவை நடக்க உள்ளதால் அம்மனுக்கு பூஜை செய்யாமல் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.

நேற்று மதியம், 12:45 மணிக்கு கோவில் நடையை பூசாரிகள், அதிகாரிகள் முன்னிலையில் திறந்தனர். பின் பூஜை செய்து அனைத்து சமூகத்தினர் பொது வழிபாட்டில் அம்மனை தரிசனம் செய்தனர். இனி பூசாரி, அறநிலையத்துறையிடம் சாவி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் அறநிலையத்துறை சேலம் உதவி கமிஷனர் ராஜா, மேற்கு தாசில்தார் அருள்பிரகாஷ், உதவி கமிஷனர் ஆனந்தி, கோவில் செயல் அலுவலர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X