டாக்டரை தாக்கிய சம்பவத்தில் 8 பேருக்கு 3 ஆண்டு சிறை
Added : பிப் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சென்னை, சென்னையைச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வழக்கில், மருத்துவக் கல்லுாரி உரிமையாளரின் மகன் உள்ளிட்ட எட்டு பேருக்கு, தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கே.கே.நகரைச் சேர்ந்தவர், டாக்டர் இளங்கோவன்; அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். முத்துக்குமரன் மருத்துவக் கல்லுாரியில், சில மாதங்கள் 'டீன்' ஆக பணியாற்றினார்.

கே.கே.நகரில் உள்ள இவரது மருத்துவமனைக்கு அதிகாலையில் நோயாளி போல வந்த ஒருவர், டாக்டர் இளங்கோவனை தாக்கினார். அவருடன் வந்திருந்த கும்பலும் தாக்குதலில் ஈடுபட்டது.

சத்தம் கேட்டு மருத்துவமனையின் முதல் தளத்தில் தங்கியிருந்த டாக்டர் இளங்கோவனின் மகன் டாக்டர் குரு பாரத், தரைத்தளத்துக்கு வந்த போது, அவரையும் கும்பல் தாக்கியது.

'பெட்டிஷனா போடுறீங்க, உங்களை காலி பண்ணிடுவோம்' எனவும் மிரட்டியது. 2014 ஜனவரியில் இச்சம்பவம் நடந்தது.

இது தொடர்பாக, முத்துக்குமரன் மருத்துவக் கல்லுாரி உரிமையாளரின் மகன் கோகுல், அலெக்ஸ் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிராக கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.

'டீன்' ஆக பணியாற்றிய போது, கோகுல் உடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக, விசாரணையில் தெரிய வந்தது.

வழக்கை, சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி வி.தங்கமாரியப்பன் விசாரித்தார்.

போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் காயத்ரி ஆஜரானார். 8 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 48 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

அபராத தொகையில், 30 ஆயிரம் ரூபாயை டாக்டர் இளங்கோவனுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X