Change in operation of double track work trains | இரட்டை ரயில்பாதை பணிரயில்கள் இயக்கம் மாற்றம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இரட்டை ரயில்பாதை பணிரயில்கள் இயக்கம் மாற்றம்
Added : பிப் 05, 2023 | |
Advertisement
 

கோவை:இரட்டை ரயில்பாதை பணிகளால், ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை - திருமங்கலம் இடையேயான ரயில்பாதையில் இன்ஜினியரிங் மற்றும் இரட்டை ரயில்பாதை பணிகள் நடக்கின்றன. இதன் காரணமாக, கோவை - மதுரை (எண்: 16721) இடையேயான தினசரி ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் - கோவை(எண்: 16321) இடையேயான தினசரி ரயில், வரும் 6ம் தேதி முதல், 8ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து விருதுநகர் சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும்; விருதுநகர் - கோவை இடையே இயக்கப்படாது எனவும், மறுமார்க்கத்தில், கோவை - நாகர்கோவில்(எண்: 16322), தினசரி ரயில், விருதுநகரில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும்; கோவை - விருதுநகர் இடையே இயக்கப்படாது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கோவை - மதுரை( எண்:16721) இடையேயான தினசரி ரயில், வரும், 7 மற்றும், 8ம் தேதிகளில், திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்; மறுமார்க்கத்தில் மதுரை - கோவை(எண்:16722) தினசரி ரயில், திண்டுக்கலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X