குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு | புதுச்சேரி செய்திகள்| MLA inaugurated the construction of drinking water pipe | Dinamalar
குடிநீர் குழாய் அமைக்கும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
Added : பிப் 05, 2023 | |
Advertisement
 
MLA inaugurated the construction of drinking water pipe   குடிநீர் குழாய் அமைக்கும் பணி  எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு



திருக்கனுார், : வம்புப்பட்டு கிராமத்தில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை அங்காளன் எம்.எல்.ஏ., பூஜை செய்து துவக்கி வைத்தார்.

திருபுவனை தொகுதி வம்புப்பட்டு கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுப்பணித்துறை மூலம் ரூ.9.92 லட்சம் மதிப்பில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான துவக்க விழா நேற்று நடந்தது.

அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகானந்தம், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பிரபாகரன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் சுதர்சனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X