விழுப்புரம், : வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சலவை தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் காகுப்பத்தைச் சேர்ந்தவர் பாபு, 43; சலவைத் தொழிலாளி. கடந்த இரண்டு நாட்களாக வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட வலியால் பாதிக்கப்பட்ட இவர், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.