DMK has not implemented any plan in government ADMK candidate list and explanation | 'தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை' அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலிட்டு விளக்கம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
'தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை' அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலிட்டு விளக்கம்
Added : பிப் 05, 2023 | |
Advertisement
 


ஈரோடு:

ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பாளர் களம் நிகழ்ச்சி நடத்தினர்.
பொது செயலாளர் ரவிசந்திரன் வரவேற்றார். தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் தென்னரசு பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில்தான், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், மேம்பாலம், கனி மார்க்கெட் வணிக வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சி வணிக வளாகம், ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் என அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, 90 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்பாட்டக்கு கொண்டு வந்தால், அ.தி.மு.க.,வுக்கு பெயர் கிடைத்துவிடும் என்பதால், 10 சதவீத பணியை நிறைவேற்றாமல் வைத்துள்ளனர். நாங்கள் எதிர் கட்சியாக இருந்தாலும், அரசிடம் வலியுறுத்துவோம். கடந்த, 2 ஆண்டுகளில் தி.மு.க., அரசால் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை. அவ்வாறு திட்டத்தை செய்திருந்தால், பட்டியலிடட்டும். இவ்வாறு பேசினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் பாண்டியராஜன், தங்கமணி ஆகியோரும் பேசினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ராமலிங்கம், கருப்பணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X