பெண்ணாடம், : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி, உலக மக்கள் நலன்பெற வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
மாலை 4:40 மணியளவில் கோவில் முன் மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் இரவு 7:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.