Thiruvilakku Pooja at Putheri Temple | புத்தேரி கோவிலில் திருவிளக்கு பூஜை | கடலூர் செய்திகள் | Dinamalar
புத்தேரி கோவிலில் திருவிளக்கு பூஜை
Added : பிப் 06, 2023 | |
Advertisement
 



பெண்ணாடம், : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

இதையொட்டி, உலக மக்கள் நலன்பெற வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.

மாலை 4:40 மணியளவில் கோவில் முன் மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை மற்றும் இரவு 7:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான சுமங்கலி பெண்கள் தரிசனம் செய்தனர்.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், கோவில் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X