காரைக்கால், : காரைக்காலில் உடல்நிலை பாதித்த மூதாட்டி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், சேத்திலால் நகரை சேர்ந்தவர் கமலம், 63; காய்கறி கடை வைத்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகள் குப்பம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் குப்பம்மாள் தனது தாய்க்கு உணவு கொடுத்துவிட்டு வெளியோர் சென்றார்.
அப்போது உடல்நலம் பாதிப்பால் விரக்தியடைந்த கமலம் மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுக்குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.