சிவசுப்ரமணியர் கோவில் கும்பாபிேஷகம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
Added : பிப் 06, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



கடலுார், : கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவிலில், அரோகரா கோஷம் முழங்க கும்பாபிேஷகம் நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடலுார் புதுவண்டிப்பாளையத்தில் 300 ஆண்டுகள் பழமையான சிவசுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. மேலும், அங்குள்ள பாலவிநாயகர், ஏழை மாரியம்மன் கோவில்களுக்கும் திருப்பணி செய்யப்பட்டது.

கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், இடும்பன், பழனி ஆண்டவர், ஆறுமுகசாமி, விநாயக முருகன், கஜலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, சிவன், பார்வதி, நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், பைரவர், வீரபாகு என, அனைத்து சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.

கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த மாதம் 27 ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள துவங்கியது. கடந்த 1ம் முதல் கால யாகசாலை பூஜை துவங்கி நடந்து வந்தது.

கும்பாபிேஷக தினமான நேற்று காலை 8ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி, 8:00 மணியளவில், பாலவிநாயகர் மற்றும் ஏழை மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்விக்கப்பட்டது.

அதையடுத்து, 10:00 மணியளவில், கோவில் ராஜகோபுர விமானங்கள் மற்றும் சுப்ரமணியர் சாமி சன்னதி உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து 108 கலச பூஜை நடந்தது.

இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம், சாமி வீதியுலா நடந்தது. மாலை தேச மங்கையற்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.

கும்பாபிேஷக விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ., லீமா அய்யப்பன், மேயர் சுந்தரிராஜா, ஜி.ஆர்.கே., குழு நிர்வாக இயக்குனர்கள் துரைராஜ், கோமதி துரைராஜ், டாக்டர் பிரவீன் அய்யப்பன், வழக்கறிஞர் சிவமணி உள்ளி்ட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கும்பாபிேஷக ஏற்பாடுகளை கோவி்ல் விழாக்குழுவினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X