விருத்தாசலம், : முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் நடந்த தைப்பூச திருவிழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த முதனை செம்புலிங்க அய்யனார் கோவில் தைப்பூசம், தீர்த்தவாரி திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
தொடர்ந்து தினசரி காலை சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, இரவு பெரியநாயகி, முதுகுன்றீஸ்வரர், பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள், செம்புலிங்க அய்யனார் சுவாமிகள் அலங்கரித்த வாகனத்தில் வீதியுலா நடந்தது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 3:00 மணியளவில் காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம் நடந்தது.
மாலை 4:00 மணியளவில் முக்கிய நிகழ்வான சித்தர் ஏரியில் வேல் முழுகுதல், தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரினசம் செய்தனர்.
இன்று சண்டிகேஸ்வரர் உற்சவம், நாளை மஞ்சள்நீர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.