திருச்செங்கோடு ஆறுமுக சுவாமி கோவிலில் 51 ஆண்டுக்கு பின் தைப்பூச தேர் திருவிழா
Added : பிப் 06, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஆறுமுக சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த, 1971ம் ஆண்டு கடைசியாக தைப்பூச தேர் திருவிழா நடந்தது. அதன் பின், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, 51 ஆண்டுக்கு பின், கடந்த ஜன., 28ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று, தை மாத பூச நட்சத்திரத்தில் வள்ளி, தேவசேனா ஆறுமுகசுவாமி, விநாயகர், சேமாஸ்கந்தர் சுகுந்த குந்தலாம்பிகை பரிவாரங்கள் புடைசூழ திருத்தேரில் எழுந்தருளினர்.
கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். மாநில தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஒன்றிய

குழு தலைவர் சுஜாதா தங்கவேல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., கவுசல்யா, டி.எஸ்.பி., மகாலட்சுமி, கோவில் உதவி ஆணையர்
ரமணிகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு
மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து துவக்கி
வைத்தனர்.
தோரோட்ட வீதிகளில் பூங்கரகம், காவடி ஆட்டம், மயிலாட்டம், சிவன் பார்வதி ஆட்டத்துடன் பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி வழியாக நிலை சேர்ந்தது. தொடர்ந்து மாலை, 4:00 மணியளவில் கைலாசநாதர், சுகந்த குந்தலாம்பிகை, சோமாஸ்கந்தர் தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து
இழுத்தனர்.
மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய தி.மு.க., செயலாளர் வட்டூர் தங்கவேல் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X