'போஸ்டர்' ஒட்டினால் நடவடிக்கை மாநகராட்சி கடும் எச்சரிக்கை
Added : பிப் 07, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



சென்னை,-சென்னையில் சுப மற்றும் துக்க நிகழ்வுகள், அரசியல் கட்சியினரின் விளம்பரங்களின் போஸ்டர்கள், பயணியர் நிழற்குடை உள்ளிட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதனால், சென்னை மாநகரின் அழகு சீர்குலைந்து வருகிறது. இது குறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது.

தொடர்ந்து, தெரு, சாலை பெயர் பலகைகளில் 'போஸ்டர்' ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் துாய்மையை பராமரிக்கும் வகையில், மாநகராட்சி சார்பில் திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மையத் தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்து பூங்காக்கள் அமைத்தல் போன்ற, அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இருப்பினும், பல்வேறு பகுதிகளில் அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பயணியர் நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, மாநகரின் அழகு சீர்குலைக்கப்படுகிறது.

பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு, தொடர்புடைய நபர்கள் மீது அபராதம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஜன., 11 முதல் பிப்., 1ம் தேதி வரை போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது 1.36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 340 நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 11 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 52 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனவே, சென்னை மாநகரின் பொது இடங்கள், மாநகராட்சி, அரசின் சார்பில் வைக்கப்பட்டுள்ள தெரு, சாலைகளின் பெயர் பலகைகள், இதர அறிவிப்பு பலகைகளில் போஸ்டர் ஒட்டும் நபர்களின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X