ரவுடி கொலை வழக்கில் 3 தனிப்படை அமைப்பு பதற்றத்தால் கடையடைப்பு; போலீஸ் குவிப்பு
Added : பிப் 07, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



வாழப்பாடி : வலசையூரை சேர்ந்த ரவுடி கொலை செய்யப்பட்டார். பதற்றம் நிலவியதால் கடைகள் அடைக்கப்பட்டு, பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.



சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த வலசையூரை சேர்ந்த ரவுடி காட்டூர் ஆனந்தன், 43; இவர் மீது கொலை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்பட, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, அயோத்தியாப்பட்டணம் அடுத்த காட்டூரில் பைக்கில் சென்றபோது, மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இவருடன் சென்ற நண்பர் பிரபாகரன் படுகாயத்துடன் தப்பினார். ஆனந்தன் உடல் காட்டூர் மயானத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

ரவுடி கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து சுக்கம்பட்டி வரை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மாநகர கமிஷனர் நஜ்முல்ேஹாதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ரவுடி கொலை தொடர்பாக ரவுடிகள், உறவினர்களிடம், காரிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாழப்பாடி டி.எஸ்.பி., ஹரிசங்கரி தலைமையில், மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்களும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



உறவினர்கள் தர்ணா

ரவுடி ஆனந்தனின் உடல் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை நடந்தது. ஆனந்தனின் மனைவி சத்யா, அவரது உறவினர்கள், கூட்டாளிகள், நண்பர்கள், மருத்துவமனையின் பிணவறை முன் திரண்டனர். உடலை பெற்று கொண்ட ஆனந்தனின் உறவினர்கள், வலசையூர் வழியே காட்டூருக்கு எடுத்துச் செல்வதாக கூறினர். அதை ஏற்க மறுத்த போலீசார், பிரச்னையை தடுக்க, அயோத்தியாப்பட்டணம் வழியே எடுத்துச்செல்ல அறிவுறுத்தினர். அதை எதிர்த்து, பிணவறை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா பேச்சு நடத்தி நிலைமையை எடுத்துரைத்தார். பின், சமாதானம் அடைந்து உடலை பெற்றுச்சென்றனர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X