15 lakh theft in furniture shop | பர்னிச்சர் கடையில் ரூ.15 லட்சம் திருட்டு | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
பர்னிச்சர் கடையில் ரூ.15 லட்சம் திருட்டு
Added : பிப் 07, 2023 | |
Advertisement
 

வந்தவாசி:வந்தவாசியில் பர்னிச்சர்கடையில், 15 லட்சம் ரூபாய் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், அச்சரப்பாக்கம் சாலையில் இஷாத் என்பவர், 'பர்னிச்சர், எலக்ட்ரானிக்' பொருட்கள் கடை வைத்துள்ளார்.

நேற்று முன் தினம் காலை கடையை திறந்த போது, இரண்டு கல்லாப்பெட்டிகள் உடைக்கப்பட்டு, 15 லட்சம் ரூபாய் திருட்டு போயிருந்தது.

வந்தவாசி தெற்கு போலீசார் விசாரணையில், கடையின் இரண்டாவது தளத்தின் தகரக்கூரையை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள், கழிவறை வழியாக கடையினுள் புகுந்து, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X