திருநெல்வேலி:திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் தந்தை மீதான பாலியல் வழக்கில் சாட்சியமளிக்க மறுத்த மகள், மகன் தீக்குளித்து தற்கொலைக்கும் முயன்றனர்.
தென்காசியை சேர்ந்த 45 வயது கூலித்தொழிலாளி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மனைவி புகாரின்படி போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் 18 வயதுக்குட்பட்ட மகள், மகன் ஆஜராயினர்.
மகளும், மகனும் திடீரென தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தொப்பலாக நனைந்தபடி நீதிமன்றத்திற்குள் சென்றனர். தீக்குளிக்கவும் முயன்றனர். அவர்களை போலீசார் மீட்டனர்.
அவர்கள், 'தந்தை தற்போது திருந்தி விட்டார். தங்களை போலீசார் சாட்சியமளிக்க கட்டாயப்படுத்துகின்றனர். சாட்சியம் கூற மாட்டோம்,' என்றனர். மாற்று உடைகள் கொடுத்து அவர்கள் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் தற்கொலை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுடலை 53. இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் கைதானார்.
கடந்தாண்டு டிச., 23ல் அவருக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை கேட்டவர் கொண்டு வந்திருந்த விஷத்தை அருந்தி நீதிமன்றத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.