திருஅறை தரிசன விழா பக்தர்கள் குவிந்தனர்
Added : பிப் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 



கடலுார் : வடலூர் அருகே மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி வளாகத்தில் நேற்று நடந்த திருஅறை தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு, 152ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, கடந்த 5ம் தேதி நடந்தது.

அன்றைய தினம் ஆறு முறை, ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று, வள்ளலார் சித்தி பெற்ற வடலுார் மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடந்தது.

அதையொட்டி, வடலுார் சத்திய ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டி மலர்களால் அலங்கரித்து, அவரது உருவப் படத்துடன் வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே ஊர்வலமாக மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்பட்டது.

பார்வதிபுரம், கருங்குழி, மேட்டுக்குப்பம் கிராம மக்கள் வழிநெடுகிலும் பூக்கள் மற்றும் பழங்களுடன் வரவேற்றனர். வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத் திருமாளிகையில், அறை முன்பு வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

அதனை தொடர்ந்து பகல் 12:00 மணியளவில் திரு அறை தரிசனம் தொடங்கி, மாலை 6:00 மணி வரை நடந்தது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரு அறை தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பல இடங்களில் சன்மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சத்திய ஞானசபை அதிகாரிகள் மற்றும் மேட்டுகுப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X