பேரூர்: ''பழநி உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அனைத்து வசதிகளையும் மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' தயார் செய்யப்பட்டு வருகிறது,'' என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களுக்கு, சிவதீட்சை வழங்கும் நிகழ்ச்சி, கோவை மாவட்டம், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் நேற்று நடந்தது. இதில், 85 மாணவர்களுக்கு பேரூராதீனம் மருதாச்சல அடிகளார் சிவதீட்சை அளித்தார். தொடர்ந்து, 85 மாணவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிவதீட்சை வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கினார்.
நிறைவில், அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அர்ச்சகர், ஓதுவார், நாதஸ்வரம், தவில் உட்பட ஐந்து நிலையில் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, 15 பயிற்சி பள்ளிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் பயிற்சி முடித்த, 85 மாணவர்களுக்கு தீட்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 27 கோவில்களில், 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
![]()
|