கையில வாங்கினோம்... பையில போடலை... காசு போன இடமும் தெரியலை என புலம்பல்
Updated : பிப் 08, 2023 | Added : பிப் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

மதுரை: 'மதுரை மாநகராட்சி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த சேமநலநிதி(பி.எப்.,) ரூ.20.05 கோடி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மழுப்பல் பதில் அளித்தால், அதுபற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகத்தில் 96 பள்ளிகள் உள்ளன. இதில் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 438 பேரிடம் 1.4.1990 முதல் 31.3.2019 வரை ரூ. 20 கோடியே 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் இத்தொகை மாநில கணக்காயர் (ஏ.ஜி.,) பரிந்துரைப்படி எந்த வங்கியிலும் 'டெபாசிட்' செய்யப்படவில்லை.

ஆனால் 1.4.2019க்குபின்னரே இந்த 438 பேருக்கும் பி.எப்., பிடித்தம் செய்ததற்கான ஆவணங்கள், வங்கியில் செலுத்தப்பட்ட விவரம் உள்ளன. இடைப்பட்ட 29 ஆண்டுகளாக பிடித்தம் செய்த தொகைக்கு எவ்வித விவரமோ, ஆவணமோ இல்லை.

இதுகுறித்து மாநகராட்சி ஆசிரியர் சங்கங்கள் எழுப்பிய கேள்விக்கு 'இந்த தொகையை சிறப்பு நிதி, மானியம் அல்லது கடனாக வழங்க கோரி நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து தொகை வந்தவுடன் மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்வோம்' என பதில் அளித்துள்ளனர்.

இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாநகராட்சியிடம், 'எந்த வங்கிகளிலும் டெபாசிட் செய்யப்படாத அத்தொகை எந்த கணக்கில் தற்போது உள்ளது.

எவ்வித கணக்கும் இல்லையென்றால் அத்தொகை எந்த திட்டங்களுக்கு செலவிடப்பட்டது' என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு 'இக் கேள்விகள் ஆர்.டி.ஐ., வரம்பிற்கு உட்பட்டதல்ல' என்று மட்டும் பதிலாக அளிக்கப்பட்டுள்ளது.

சீனிவாசகன் கூறியதாவது:

ஆசிரியர்களிடம் 29 ஆண்டுகளாக பிடித்த ரூ. பல கோடி பி.எப்., தொகை எங்கே என்ற விவரமே மாநகராட்சியில் இல்லை. இதுகுறித்த ஆர்.டி.ஐ., கேள்விகளுக்கும் மாநகராட்சி மழுப்பலாகவே பதில் அளித்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகை உரிய முறையில்டொபாசிட் செய்யப்படாததால் முன்பணம், கடன் வசதி பெற முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். அத்தொகை எந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரம் கூட இல்லாமல் மர்மமாக உள்ளது.

தொகை எங்கே, எதற்காக பயன்படுத்தப்பட்டதுஎன மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X