Case against Tawheed Jamaat administrators for defamation of Nagor Dargah | நாகூர் தர்கா பற்றி அவதுாறு பேச்சு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு | திருச்சி செய்திகள் | Dinamalar
நாகூர் தர்கா பற்றி அவதுாறு பேச்சு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு
Added : பிப் 08, 2023 | |
Advertisement
 



திருச்சி : திருச்சி அருகே நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், நாகூர் தர்கா பற்றியும், மதங்கள் பற்றியும் அவதுாறு பேசியதாக, 'தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை சேர்ந்த, 33 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள சிறுகனுாரில், கடந்த 5ம் தேதி, தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில், மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு, மாநில தலைவர் சுலைமான் தலைமையில் நடந்தது. மாநாட்டில், நாகூர் தர்கா குறித்தும், மத நம்பிக்கைகள் குறித்தும் அவதுாறாக, அமைப்பின் நிர்வாகிகள் பேசினர்.

இதையடுத்து, நாகூர் தர்கா தலைவர் கலிபா சாகிப் உள்பட நான்கு பேர், சிறுகனுார் போலீசில் புகார் அளித்தனர்.அதன்படி, தவ்ஹீத் அமைப்பின் தலைவர் சுலைமான், பொதுச்செயலர் அப்துல் கரீம், செயலர் சித்திக், பேச்சாளர் சுலைமான், நிர்வாகக்குழு உறுப்பினர் சம்சுல்ஹா ரகுமானி உள்பட, 33 பேர் மீது, சிறுகனுார் போலீசார், வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X