மோகனுார்: 'வரும், 13ல், லாபகரமான முறையில் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 13ல், காலை, 10:00 மணிக்கு, 'லாபகரமான முறையில் மீன் வளர்ப்பு' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது.
இப்பயிற்சியில், மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், மீன்களுக்குத் தேவையான இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு தாயாரிக்கும் முறைகள், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு, நோய், உணவு, மற்றும் நீர் மேலாண் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், மத்திய, மாநில அரசின் மீன் வளர்ப்புக்கு உள்ள மானியம் பற்றியும் விளக்கப்படுகிறது. அதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.