விதிமீறல் வாகனங்களுக்கு 'கிடுக்கிப்பிடி'; மாதந்தோறும் இனி 'மெகா' வாகன தணிக்கை
Added : பிப் 08, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

திருப்பூர் : திருப்பூரில், திருட்டு வாகனங்களை கண்டறிய மாதந்தோறும் ஒரே நேரத்தில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ள போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டம் - ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார் அன்றாடம் வாகனம் தணிக்கை மேற்கொண்டு விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். சமீபத்தில், போலீஸ் கமிஷனராக பொறுபேற்ற பிரவீன்குமார் அபினபு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். கமிஷனர் உத்தரவின் பேரில், 'மாஸ்' வாகன தணிக்கையை மாதந்தோறும் ஒன்றிரண்டு முறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

முதல்கட்டமாக கடந்த, 25ம் தேதியும் மற்றும் 6ம் தேதியும் மாநகர பகுதியில் ஒரே கட்டமாக, 10க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய குழுவினர் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் தலைமையில், பிரதான ரோடுகளில், 16 இடங்களில் வாகன தணிக்கை செய்தனர்.

இதில் ஆயிரத்து, 500 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாத, 34 வாகனங்கள், மதுபோதையில் வந்த, ஒன்பது வாகனங்கள் மற்றும் பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 513 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். போலி நம்பர் பிளேட், பெயர் மாற்றப்படாமல் இயங்கும் வாகனம், விதிமீறல் வாகனம் என, பல வகையில் போலீசார் சோதனை செய்தனர். சோதனை செய்யப்படும் வாகனத்தின் எண்களை உடனடியாக 'காவலன் செயலி'யில் பதிவிட்டு சோதனை செய்கின்றனர்.

இதனால், வாகனத்தின் அனைத்து விவரங்களும் போலீசாருக்கு தெரிய வருவதால், விதிமீறல் இருந்தால் அபராதம் விதிக்கின்றனர். இல்லையென்றால் அனுப்பி விடுகின்றனர். விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் போலீசாரிடம் சிக்கி கொள்கின்றனர். குறிப்பாக ஒன்றிரண்டு திருட்டு வாகனங்களும் போலீசாரிடம் சிக்கியது.



சிக்கியது திருட்டு டூவீலர்




திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறியதாவது:

போலி நம்பர் பிளேட், பெயர் மாற்றாமல் வாகனம் ஓட்டுவது போன்ற காரணத்தால், குற்றங்கள் நடக்கும் போது கண்டுபிடிக்க போலீசாருக்கு சில சிரமம் ஏற்படுகிறது. இதற்காக, மாநகரில் இரு முறை, 20 இடங்களில் போலீசார் ஒரே கட்டமாக வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தணிக்கையில், பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கப்பட கூடிய வாகன ஓட்டிகளுக்கு, பெயர் மாற்றம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடந்த வாகன தணிக்கையில், திருட்டு டூவீலர் ஒன்று சிக்கியது.

இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதவிர மற்ற விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரும் மாதங்களில் மாதம், ஒன்று அல்லது இரு முறை 'மாஸ்' வாகன தணிக்கை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X