திருப்போரூர் கந்தசுவாமி உற்சவர் தேர் ஆதிதிராவிடர் பகுதிக்கும் வர வேண்டும் அறநிலையத் துறை உதவி கமிஷனருக்கு மனு
Added : பிப் 09, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா, வரும் 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

விழாவின் உற்சவர் வீதி உலா, திருப்போரூர் பேரூராட்சி, 15வது வார்டு, படவேட்டம்மன் கோவில் தெரு பகுதிக்கு வர வேண்டும் என அப்பகுதி கவுன்சிலர் பாரதி, ஹிந்து அறநிலையத் துறை உதவி கமிஷனருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த, 17ம் நுாற்றாண்டின் இறுதியில், திருப்போரூர் ஊருக்கு வந்த முதல் ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்.

அவர், இந்த ஊரின் பிரசித்தி பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலை மறுசீரமைப்பு செய்தார்.

முருகன் கோவில் பிரம்மோற்சவ விழாவிற்கு முன்னதாக, கிராம காவல் தெய்வமான முண்டச்சி அம்மன் தாய்வீடான எங்கள் பகுதிக்கு வந்து, முதல் மரியாதை பெற்ற பின் தான், முருகன் கோவில் பிரம்மோற்சவ விழாவே நடைபெறுவது வழக்கம்.

கடந்த நுாற்றாண்டுகளாக, முருகன் கோவில் பிரம்மோற்சவ விழாவின் போது, முருக பெருமானின் உற்சவர் தேர், மாடவீதிகளிலும், ஊர் தெருக்கள் வழியாகவும், அருகில் உள்ள தண்டலம், ஆலத்துார் போன்ற பக்கத்து கிராமங்களுக்கும் சென்று வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் எங்களது 15வது வார்டு, படவேட்டம்மன் கோவில் தெரு, ஆதிதிராவிடர் பகுதிக்கும் வந்து செல்ல, ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Godyes - Chennai,இந்தியா
09-பிப்-202319:38:44 IST Report Abuse
Godyes சுவாமியை ஆதி திராவிட பகுதிக்கு கொண்டு வருவதில் தவறில்லை. மற்றவரிடமுள்ள நல்ல பழக்க லழக்கங்கள் அவர்களிடம் உள்ளதா என்றறிவது முக்கியம்.அவர்களை நம்மிடம் உறவு வைத்துக்கொள்ள இது வரை எந்த அரசும் சட்டமியற்றவில்லை. அவர்களை நடத்தையாலும் கல்வி அறிவாலும் உயர்த்த
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X