சொத்து வரி செலுத்தாவிட்டால் 'ஜப்தி' தாம்பரம் கமிஷனர் அதிரடி
Added : பிப் 09, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகளில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை, 5.59 லட்சம் பேர். இதில், சொத்து வரி செலுத்துவோர் 2.12 லட்சம் பேர் உள்ளனர்.

இம்மாநகராட்சியில், நடப்பாண்டின் வரி வசூல், 247 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக, 17 இடங்களில் வசூல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

ஏழு வருவாய் ஆய்வாளர்கள், 24 வருவாய் உதவியாளர்கள் மூலம், வரி செலுத்தாத வீடு, கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது.

மற்றொரு புறம், நிலுவை வைத்துள்ளோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலமும் குறுஞ்செய்தி அனுப்பி வசூல் செய்யப்படுகிறது. இதுவரை, 65 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக சில நாட்களுக்கு முன், அழகுமீனா ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்றார்.

அவர், முதல் நடவடிக்கையாக, மண்டலங்களில் நிலவும் குப்பை பிரச்னையை ஆய்வு செய்து, அதிகாரிகளை எச்சரித்துள்ளார். அடுத்த நடவடிக்கையாக, 100 சதவீத வரி வசூலில் கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக, வருவாய் துறை பிரிவில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், இம்மாத இறுதிக்குள், 90 சதவீதம், மார்ச் இறுதிக்குள் 100 சதவீத வரி வசூலை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மாநகராட்சியின் நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தி, வரி செலுத்தாத சொத்துக்களை 'ஜப்தி' செய்யவும், மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.



‛மொபைல் 'ஆப்' மூலம் வரி


மொபைல் போனில், 'பிளே ஸ்டோர்' தளத்தில் TN Urban Esevai என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட கட்டணங்களை, வீட்டில் இருந்தபடியே செலுத்தலாம். மேலும், புகார்களையும் இதன் வாயிலாகவே தெரிவிக்கலாம்.





நடப்பாண்டின் வரி இலக்கு


வரி இனங்கள்- ரூபாய்
சொத்து வரி 152 கோடி
தொழில் வரி 18 கோடி
குடிநீர் கட்டணம்- 15 கோடி
பாதாள சாக்கடை- 16 கோடி
வரி இல்லாத இனங்கள்- 15 கோடி



 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X